Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனோக்கியநாத சுவாமிகோவிலில் ... பாளை. திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ நந்தகோபாலன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2012
11:04

கம்பம்:கம்பம் ஸ்ரீ நந்தகோபாலன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கம்பம் ஒக்கலிக சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்தம்பம், ராஜகோபுரம், விநாயகர், கிருஷ்ணன், சாலைக்கோபுரம், நவக்கிரகம் மற்றும் நாகதேவதைகளுக்கு மகா கும்பிஷேகம் நடந்தது. கடந்த 23-ல் யாக பூஜைகளை தந்துரி முக்கின் பிரம்மஸ்ரீ லால்பிரசாத் பட்டாத்திரி ஆகம விதிப்படி துவக்கி வைத்தார். 2 நாட்களாக பல்வேறு வேள்விகள், ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு க.புதுப்பட்டியில் உள்ள உண்டேனவர் குலதெய்வம் ஸ்ரீசந்தனதேவி அம்மன் சன்னதியில் இருந்து தானவானாக்காரர்கள் கோபுர கலசங்களோடு வந்தனர். நான்காம் கால வேள்வி துவங்கியது. தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் தலைமை குருக்கள் சதாசிவ குருக்கள் மற்றும் திருப்பதி, உடுப்பி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய வைணவத் தலங்களில் இருந்து வந்த பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோபுரங்களில் புனித நீர் தெளிக்க, கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய "கோபாலா "கோபாலா கோஷம் விண்ணை முட்டியது. அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பம் ஒக்கலிகர் சமூக நாட்டாண்மை பார்த்திபன், திருப்பணிக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சேகர், ஸ்ரீ நிர்மலாநந்தநாத சுவாமி, ஸ்ரீ சோமேஸ்வரநாத சுவாமி, மூன்று மாவட்ட துணைத் தலைவர் சிவாஜி மோகன், ஊஞ்சாம்பட்டி ஊராட்சித்தலைவர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளியங்கிரி தலைமையில், மாவட்ட செயலாளர் ஏ.கே.எம். செந்தில்குமார் முன்னிலையில், மாநில கவுரவ தலைவர் கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar