கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2020 05:01
கும்ப ராசி அன்பர்களே!
குரு, சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். செவ்வாய் பிப்.9ல் இடம் மாறி நன்மை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். சுக்கிரனால் பொன், பொருள் சேரும். பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். ஜன.22க்கு பிறகு புதனால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு குறுக்கிடலாம். பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அண்டை வீட்டார் வகையில் பிரச்னை வரலாம். பிப்.4க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் உண்டு.
பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பண உதவி கிடைக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போகலாம் கவனம். பணிபுரியும் பெண்கள் சிலர் உயர் பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. ஜன.22க்கு பிறகு பிரச்னை ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலையில் மட்டும் அக்கறை கொள்ளவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மறைமுகப்போட்டி குறையும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். வெளியூர் பயணம் ஏற்படும். பிப்.4க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். * வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் குருபலத்தால் மேன்மை அடைவர். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலருக்கு பதவி உயர்வு தானாக வந்து சேரும். * ஐ.டி., துறையினர் வேலையில் திருப்தி காண்பர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். * மருத்துவர்கள் திறமை பளிச்சிடும். அதற்குரிய வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும். * வக்கீல்களுக்கு வழக்குகளில் பிப்.9க்கு பிறகு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் உயரும். * ஆசிரியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பிப்.4க்கு பிறகு அரசு வகையில் கடனுதவி கிடைக்கும். * அரசு பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பிப்.9க்கு பிறகு உன்னத பலனை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு குறையும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். * அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பிப்.9க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. * பொதுநல சேவகர்கள் புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். முன்னேற்றத்திற்கு உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். * கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். * விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. மஞ்சள், பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனை வகையில் நல்ல மகசூல் கிடைக்கும். பிப்.9க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் * மாணவர்களுக்கு புதன் சாதகமற்று உள்ளதால் கவனமுடன் படிப்பது நல்லது. அதே நேரம் குருவால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* அரசு பணியாளர் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. விடா முயற்சியால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜன.22க்கு பிறகு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். * தரகு, கமிஷன் தொழிலில் பொருளாதார இழப்பு ஏற்படும். விழிப்புடன் செயல்படவும். * விவசாயிகளுக்கு கால்நடை வகையில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணப்பயிர்களை பயிரிட வேண்டாம்.
பரிகாரம்: * ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம் * தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு * ரோகிணியன்று கிருஷ்ணருக்கு துளசி மாலை
* நல்ல நாள்: ஜன.15,20,21,22,23,27,28, பிப்.1,2,8,9,10,11 * கவன நாள்: ஜன.16,17 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3,5 * நிறம்: வெள்ளை, மஞ்சள்
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »