காலையில் நீராடி கிழக்கில் உதிக்கும் சூரியனை வழிபடுவது நம் பாரம்பரிய வழிபாடு. இதை “சூரிய நமஸ்காரம்” எனச் சொல்வர். இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாடே முதன்மையானது. காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணமும் யுகமாக கழிந்தது. பொழுது புலர்ந்த போது சூரியன் வானில் ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சியுடன் வழிபட்டான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.