பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தொப்பம்பட்டி யில் உள்ள அரசமரத்தடி ராஜகணபதி கோவிலில், பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பொங்கல் விழாவையொட்டி, அதிகாலை சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், ராஜகணபதி இமயமலையில் அமர்ந்து தவம் செய்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அருள்மிகு ராஜகணபதி புதிய கோலத்தில் அருள்பாலிப்பது அறிந்து, திரளான பக்தர்கள் கோயில் வளாகத்தில் கூடி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.