உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் இன்று (ஜன.16) தைத் திங்கள் 2ம் நாள் ஆண்டாள் கனு பிடி உற்சவம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் தைத் திங்கள் 2ம் நாள் ஸ்ரீஆண்டாள் கனு பிடி உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 5.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 6.30 மணிக்கு ஆராதனை நடந்தது. காலை 9 மணியளவில் ஸ்ரீஆண்டாள் சர்வ அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன், சம்பத் ஐயர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.