Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் ... உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை விழா துவக்கம்! உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்தனர் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
10:04

சென்னை: இஸ்கான் கோவில் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் ராதா கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிவுற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாள் யாகசாலை : இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள, ராதாகிருஷ்ணர், லலிதா விசாகா, கவுர நிதாய், ஜகந்நாதர், பலதேவ், சுபத்ரா மற்று கிருஷ்ண பலராவ் மூர்த்திகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, ஜெயபாதகா தலைமையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, முக்கால பூஜைகள் நடந்தன. பின், நேற்று காலை 9 மணிக்கு கும்பத்திற்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

குவிந்தனர் பக்தர்கள் : கும்பாபிஷேகத்தையொட்டி, இஸ்கான் கிளைகள் உள்ள திருவனந்தபுரம், பெங்களூரூ, உத்தரப் பிரதேசம், கோல்கட்டா, சேலம், திருச்சி ஆகிய பகுதியில் உள்ள பக்தர்கள் அதிகாலையில் இருந்தே வரத் தொடங்கினர். கும்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கும்பத்திற்கு நன்னீராட்டு விழா முடிந்ததும் தீபாரதனை காட்டப்பட்டது.

சிறப்பு தரிசனம் : கும்பாபிஷேகம் முடிந்து ஆடை அலங்காரத்துடன் காட்சியளித்த தெய்வங்களுக்கு, அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தரிசனத்திற்காக இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்து வைத்திருந்தனர். இரவு 9 மணி வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகிகள் சுபத்ரா கிருஷ்ண தாஸ், கவ்ரவ் கிருஷ்ண தாஸ் தெரிவித்தனர்.

அறுசுவை பிரசாதம் : சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் முடிந்ததும், பக்தர்களுக்கு பானகம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு அறுசுவை கொண்டபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் தொடங்கி இரவு வரை, கோவில் வளாகத்தில், கிருஷ்ண பக்தர்கள் பஜனை பாடல்களைப் பாடினர். இதைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar