பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம் நடந்தது. தைப் பொங்கல் திருநாளை தொடர்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். அப்போது பெருமாள் புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தார். காலை 11:00 மணிக்கு புறப்பட்ட பெருமாள், மாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு மேல் கோயிலில் பாகவதர்கள் பஜனைப்பாடல்கள் இசைத்தபடி வந்தனர். இதனையடுத்து இரவு 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.