பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
பாகூர் :பாகூரில் பழமை வாய்ந்த மூலநாதர் கோவிலில், மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல், சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி, பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. நேற்று புதுச்சேரிக்கு வந்த மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். கோவிலை வலம் வந்து, தல வரலாறு குறித்து கேட்டறிந்தார். கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தை வலம் வந்து, வணங்கினார். பாழடைந்த நிலையில் உள்ள நடராஜர் மண்டபத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்ரமணியன், சுரஷே் ஆகியோருக்கு, மத்திய அமைச்சர் உத்தரவிட்டார். மதியம் 2.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வழியில், மணப்பட்டு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். முன்னதாக, கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சருக்கு, அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன் தலைமையில், பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் கோவேந்தன், தொகுதி தலைவர் கோபாலக்கிருஷ்ணன், தொகுதி பொதுச் செயலாளர் புவனசுந்தரம், வைரமுடி, ரமஷே் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.