பதிவு செய்த நாள்
26
ஜன
2020
02:01
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, 18 ஆண்டுகளுக்கு பிறகு நடத்த முடிவு
செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன.திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. இன்று காலை, 4:30 மணிக்கு மேல், மங்கள இசை, விநாயகர் பூஜை, சைவ புண்யாஹம், நவகவ்யம், அனுஞாஷ்டகம், மகா கணபதி ேஹாமம் நடக்கிறது. மாலையில் உத்தமபத வாஸ்து சாந்தி நடக்கிறது.நாளை, 27ம் தேதி காலை, விநாயகர் வழிபாடு, நவகலச ஸ்நபனம், மாலை மிருத்சங்கரஹணம்; 28ம் தேதி காலை, தீர்த்த, அக்னி சங்க்ரஹணம், யாக சாலை ஆரம்பமாகிறது. அன்று, இரவு முதற்கால பூர்ணாகுதி பூஜைகள் நடக்கிறது.வரும், 29ம் தேதி இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகம் நடக்கிறது. 30ம் தேதி காலை, நான்காம் கால யாகமும், காலை, 9:30 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கடம் புறப்பாடு, கன்னிமூல கணபதி, ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி, ராஜகோபுரம், சுப்ரமணியசுவாமி விமான கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மேல், கன்னிமூல கணபதி, சுந்தரேஸ்வரர், மீனாட்சி, சுப்ரமணிய சுவாமி மூலாலய கும்பாபிஷேகமும், அலங்கார வழிபாடு, மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதான விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.