Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவில் தைப்பூச விழா ... சக்தி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் சக்தி மாரியம்மனுக்கு பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2020
07:02

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழா, முதலாம் கால யாகசாலை பூஜையுடன், நேற்று மாலை துவங்கியது. உலக புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழா, 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கோவிலில் திருப்பணிகள்  செய்யப்பட்டது. டிச., 2ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கோவிலில் உள்ள, 252 சிவலிங்கத் திருமேனிகள் உட்பட, 338 சுவாமி விக்ரகங்களுக்கு, மா காப்பு நடத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி துவங்கியது.

 கும்ப அலங்காரம்: இதன் நிறைவாக, பெருவுடையாருக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி, நேற்று நிறைவுபெற்றது. இதற்காக, குன்றக்குடி அருகே உள்ள நேமம் கிராமத்திலிருந்து அரக்கு, குங்குலியம் உட்பட, எட்டு வகையான, 2.5 டன் மருந்து பொருட்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. கங்கை, யமுனை மற்றும் காவிரி நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கடங்களை, உற்சவ மண்டபத்திலிருந்து சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியம் முழங்க, நேற்று காலை யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். அங்கு, கும்ப  அலங்காரம், தேவதாகலா கர்ஷணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. மாலை, யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகள் - 41, பலிபீடம் - எட்டு, நந்தி - 10, கோவில் கலசம் - 22 என, 405 சுவாமிகளுக்கும் உரிய, 705 கடங்களை, வேதிகையில் வைத்து வழிபாடுகளை துவங்கினர். இதில் இஷ்டதானம், தசதானம், பஞ்சதானம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசமும், தொடர்ந்து, முதலாம் கால யாகசாலை பூஜையுடன், விழா தொடங்கியது. பின்னர்  பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதற்காக, சிவாச்சாரியார்கள், 300 பேர், 110 குண்டங்களில், யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். இன்று முதல், 5ம் தேதி வரை, எட்டு கால பூஜை நிறைவுற்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புனிதநீர் எடுத்துச் செல்லும் நிகழ்வில், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றனர். தலைமை செயலர் ஆய்வு தமிழக தலைமை செயலர் சண்முகம், கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை, நேற்று ஆய்வு செய்தார். தமிழக பொதுத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, கலெக்டர் கோவிந்த ராவ், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., லோகநாதன் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar