பதிவு செய்த நாள்
07
பிப்
2020
10:02
திருவண்ணாமலை; மாதந்தோறும் பவுர்ணமி நாளில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில், தை மாத பவுர்ணமி திதி, நாளை மாலை, 3:33 மணி முதல், 9ம் தேதி மதியம், 1:46 மணி வரை உள்ளது. இந்நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.