Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவில் ... திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் துவங்கியது மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் துவங்கியது மண்டலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2020
10:02

தஞ்சாவூர: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷகேத்தை தொடர்ந்து, நேற்று முதல் மண்டலாபிஷேகம் துவங்கியது.

சித்திரை பிரமோற்சவம் விழா காரணமாக, மண்டலாபிஷேகம், 24 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் பெரியகோவிலில், 23 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம், வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, நேற்று முதல் மண்டலாபிஷேகம் துவங்கியது. மண்டலாபிஷேகம்மண்டலாபிஷேகம் வழக்கமாக, 48 நாட்களுக்கு நடைபெறும் நிலையில், சித்திரை பிரமோற்சவம் விழாவிற்கான, பந்தல் கால் நடுதல் மற்றும் காப்புக் கட்டுதல் போன்ற விழாக்கள் நடக்க இருப்பதால், மண்டலாபிஷேகம், 24 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.பிரதோஷம்கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக, டிச., 2ல், தேதி பாலாலயம் செய்யப்பட்டதால், பிரதோஷம் நடத்தப்படவில்லை. கும்பாபிஷேகம் விழா முடிந்த நிலையில், நேற்று மாலை, பிரதோஷம் நடைபெற்றது.இதில் நந்தி பெருமானுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.

பஞ்சமூர்த்திகள்: நேற்று முன்தினம் இரவு விநாயகர், வள்ளி - தெய்வனையுடன் சுப்ரமணியர், பெருவுடையார் உள்ளிட்ட சுவாமிகள் மற்றும் ராஜராஜசோழன், உலகமாதேவி, ராஜேந்திர சோழன் ஆகியோர் சிலைகளுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை காட்டப்பட்டது.பின், பல்வேறு வாகனங்களில், சுவாமிகள் எழுந்தருளி, ராஜவீதிகளில் உலா வந்தனர்.அப்போது மேளதாளங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar