திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் தை உற்சவத்தை முன்னிட்டு இன்று (பிப்.,7 ல்) தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா, ஜன.,30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் இன்று (பிப்.,7) நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.