Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் கோவில்களில் இன்று தைப்பூச ... ராமகிரியில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஞானபுரி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2020
11:02

திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, ஞானபுரி சித்ரகூட சேத்ரத்தில், சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜையை, தினகர் சர்மா தலைமையிலானோர் நடத்தினர். நேற்று காலை, 9.2? மணிக்கு குடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, ஆஞ்சநேயர், கோதண்டராமர், லட்சுமி நரசிம்மர் சன்னிதி விமானங்களை அடைந்தது. தங்க குடத்தில் எடுத்துவரப்பட்ட புனித நீரை, சகடபுரம் சங்கராச்சாரியார் கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், 9:47 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமி விமான கலசத்தில் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து கோதண்டராமர், லட்சுமி நரசிம்மர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்தாபகர் ரமணிஅண்ணா, கோதண்டராமர் சன்னதி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின், சுவாமிகளுக்கு அபிஷேகம், மகா பூஜை, தீபாராதனை, பஞ்சபட்ச நைவேத்தியம் செய்யப்பட்டது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நன்னிலம் டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டர் மூலம், கோவில் கோபுரம் மீது மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை, வெள்ளி ரதத்தில், ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 3,300 கிலோவில், 5 வகை மலர்களால் புஷ்ப விருஷ்டி செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar