பதிவு செய்த நாள்
12
பிப்
2020
10:02
பேரூர் : பூண்டி வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு, நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சியில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி கோவில். இக்கோவில் அருகே உள்ள மலைத்தொடரில், ஏழாவது மலையின் உச்சியில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. பக்தர்கள் மலைப்பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்தமலையின் மீது பிப்., முதல், மே. வரையிலான, நான்கு மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. நடப்பாண்டு மலையேற்றம் நேற்று முதல் துவங்கியது. போளுவாம்பட்டி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர், மலைப்பாதையை பக்தர்களுக்காக திறந்து விட்டனர். மேலும், பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 7 லட்சம் வரையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். எனவே, நடப்பாண்டு கூடுதலாக பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.