Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி விநாயகர் கோவிலில் சங்கடஹர ... திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2020
01:02

 உத்தமபாளையம், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக திருப்பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்து தந்தபின் திருப்பணிகள் துவங்கும் என தலைவர் .சண்முகம் தெரிவித்தார்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மிகவும் புராதானமானதும், பிரசித்திபெற்றதுமாகும். தென்காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. ராகுகேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. காசிக்கு அடுத்தபடியாக ஆறு தெற்கு நோக்கி பாயவும், ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி கோயில் இருக்கும்படி அம்சம், இங்கு தான் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த கோயில் திருப்பணி நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்துவிட்டதால், தற்போது திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்கென உத்தமபாளையம் மற்றும் கோகிலாபுரத்தை சேர்ந்த 46 பேர் கொண்ட திருப்பணிக்குழு, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எம்.சண்முகம் தலைமையில் நியமிக்கப்பட்டது. அவர்கள் துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப்பெற்றனர். திருப்பணிக்குழு தலைவர் கூறுகையில், கோயிலில் 16 பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 4 பணிகள் அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். மற்றவை உபயதாரர்களை கொண்டு செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்து தர வேண்டும். விரைவில் மதிப்பீடு செய்யும் பணிகள் துவங்கும். அதற்கு பிறகு திருப்பணிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar