Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹயக்கிரீவருக்கு சிறப்பு யாக பூஜை திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.18 லட்சம் திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.18 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மாசித்தெப்பம்: ஊராட்சி சார்பில் அடிப்படை வசதிகள்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் மாசித்தெப்பம்: ஊராட்சி சார்பில் அடிப்படை வசதிகள்

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
11:02

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு தெப்பக்குளத்தைச் சுற்றிலும் அடிப்படை வசதிகள் செய்ய துப்புரவுப் பணியை ஊராட்சியினர் துவக்கியுள்ளனர்.

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் மார்ச்சில் துவங்குகிறது. வைரவன்பட்டி ஜோசியர் தெப்பக்குள படித்துறையில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுதலும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும், பகல் தெப்பம், இரவு தெப்பம் என்று 10 நாட்கள் விழாக்கோலம் காணப்படும். இம்முறை பாதுகாப்பிற்காக தேவஸ்தானத்தினர் உபயதாரர் மூலம் குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகளை ஊராட்சியினர் முன்னதாகவே துவக்கியுள்ளனர். மாவட்ட கலெக்டர் 2 இயந்திரங்களை அனுமதித்துள்ளார். சிவகங்கை தேவஸ்தானம்,மக்கள் நல குழுவினர், உழவர் மன்றத்தினர் 100 பேர் ஊராட்சி துணைக்குழுக்கள் இணைந்து பல கட்ட பணிகளை துவக்கியுள்ளனர். குளத்திற்கு கடந்த 2 வாரங்களாக நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குளக்கரையைச் சுற்றித் துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், விரிவான வாகன நிறுத்தம் 5 முக்கிய ரோடுகளில் அமைக்கப்படுகிறது. உள்ளூர் ஆட்டோக்கள் மூலம் விழா பகுதியில் நியாயமான கட்டணத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கூடுதலாக கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. ஊராட்சி மூலம் 10 இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். தன்னார்வலர்கள் மூலம் பல இடங்களில் தண்ணீர்,மோர்ப்பந்தல் அமைக்கப்படும். தெப்பக்குளம் முதல் கோயில் பகுதி வரை மின் விளக்குகள் அமைக்கப்படும். இரு இடங்களில் சுகாதார மையம் செயல்படுத்தப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar