Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புத்தேரி பெருமாள் கோவிலில் விசாக நட்சத்திர வழிபாடு புத்தேரி பெருமாள் கோவிலில் விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை: கொரோனா தடுப்பு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை: கொரோனா தடுப்பு நடவடிக்கை

பதிவு செய்த நாள்

16 மார்
2020
01:03

சென்னை:கொரோனா வைரஸ் பீதி காரணமாக, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவீன தெர்மா மீட்டரில், பரிசோதனை செய்த பின்னரே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறை சார்பில், சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சீனாவில் உருவெடுத்த, கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தையும் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்பாக, மால், திரையரங்கு, வங்கி, தேவாலயங்கள், ஏ.டி.எம்., போன்ற பகுதிகளில், தொற்று உண்டாவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.நேற்று, கோவில்கள், தேவாலயங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னதாக, இருக்கைகள், சுவர், கைப்பிடி போன்ற பகுதிகளில், கிருமி நாசினி போட்டு துடைக்கப்பட்டது. பல தேவாலயங்களில், கிருமி நாசினி கொடுத்து, கையை சுத்தம் செய்த பின் தான், பக்தர்களை அனுமதித்தனர். மால்கள், திரையரங்குகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருக்கைகள், கைப்பிடிகள் கிருமி நாசினி போட்டு துடைக்கப்பட்டது.மேலும், மால்கள், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளும் வழங்கினர்.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நேற்று முதல், நவீன தெர்மா மீட்டர் கொண்டு, கோவில் நுழைவாயிலிலேயே, பக்தர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடபழநி கோவில் நிர்வாகம், இந்த பரிசோதனையை செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar