Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் கை ... சிதிலமடைந்த மெதுார் பர்வதீஸ்வரர் கோவில் சிதிலமடைந்த மெதுார் பர்வதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் ஈசனே.. காப்பாத்து! கொரோனா அபாயம்!
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் ஈசனே.. காப்பாத்து! கொரோனா அபாயம்!

பதிவு செய்த நாள்

17 மார்
2020
12:03

பேரூர்:பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலையேற்றம் தீவிரமடைந்து, கேரளா மற்றும் கர்நாடக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இங்கு, கொரோனா குறித்த சோதனையோ, விழிப்புணர்வோ செய்யப்படுவதில்லை. இதனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி கோவில் உள்ளது. ஏழாவது மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, பிப்., முதல், மே வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டு சீசன், பிப்., 11ல் துவங்கியது. நேற்று வரை, சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். மலையேற்றத்துக்கு பயன்படும் மூங்கில் குச்சிகள் மட்டும், 40 ஆயிரம் வரை விற்றுள்ளது.சனி பிரதோஷம் மற்றும் வார விடுமுறை நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நேற்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள், குழுவாக வந்திருந்தனர்.

வெளிநாட்டினரும் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகின்றன.தமிழக அரசு, பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில், கொரோனா வைரஸ் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சீசன் காலம் முடியும் வரை, நிரந்தர மருத்துவ குழுவை இங்கு நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar