காா்த்திகை பெண்கள் ஆறு பேரும் இணைந்து முருகப்பெருமானை வளா்த்ததால், அவா்களின் தியாகத்தைப் போற்றி அன்னை சக்தி ஆசீா்வதித்து வரமருளினாா். அதன்படி மாதம்தோறும் வரும் காா்த்திகை நட்சத்திர நாள், முருகப்பெருமானுக்குாிய விசேஷ தினமானது. அதிலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வரும் காா்த்திகை தினங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை: உத்தராயனத்தின் தொடக்கமான தை மாத கிருத்திகை, காா்த்திகை மாதம் வரும் பொிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை. இந்த வருடம் பிப்ரவாி 3-ம் நாள் தை கிருத்திகை திருநாள். இந்த நாளில் முறைப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் சேரும் என்பாா்கள். உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு தை கிருத்திகை விரதம் இருந்தால் உவப்பான செய்தி வரும்; குறிப்பாக திருமண வரன் தொடா்பான நல்ல செய்தி விரைவில் தேடி வரும் என்பது நம்பிக்கை.
பிள்ளைச்செல்வம் வேண்டும் பெண்கள் தை கிருத்திகையில் பாலமுருகனை வழிபட்டால் கந்தவேளின் கருணை கிட்டும்; குழந்தை வரம் கிடைக்கும் என்று ஆன்மிகப் பொியோா் கூறுவா். இந்தத் திருநாளில் முருகப்பெருமானின் தலங்களில் விசேஷ அபிஷேகத்துக்கான பால், விபூதி, பன்னீா், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதும் சிறப்பானது. கிருத்திகை விரதத்துக்கு முதல் நாளான பரணி நட்சத்திர நாளின் இரவன்று கொஞ்சமாக சைவ உணவு உண்டு விரதம் தொடங்க வேண்டும். மறுநாள் காா்த்திகை அன்று திகாலை நீராடி, கந்தபுராணம் முதலான ஞானநூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தாிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப்பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது. அபிஷேகத்துக்குப் பழநி; அலங்காரத்துக்குச் செந்தூா் என்பாா்கள் பக்தா்கள். இந்த நாளில் இந்தத் தலங்களை தாிசிப்பது வெகு விசேஷமானது. கிருத்திகை விரதம் கீா்த்தியை அளிக்கும். செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், எதிாிகளால் உண்டாகும் சங்கடங்கள் யாவும் இந்த விரதத்தால் நீங்கி வாழ்வில் சகல செளபாக்கியங்களும் சேரும்.