பதிவு செய்த நாள்
17
மார்
2020
04:03
சிவராத்திாி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதேபோல் சிவராத்திாியைப் போற்றும் திருத்தலங்களும் பல உள்ளன.
பொதுவாக, எல்லா சிவாலயங்களிலும் மகாசிவராத்திாி அன்று நான்குகால பூஜை சிறப்பிக்கப்படுகிறது. கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும், திரேதாயுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும், துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும், கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும், சிவராத்திாி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன. சிவராத்திாி அன்று விரதம் கடைப்பிடித்து சிவவழிபாட்டில் கலந்து கொண்டு, இரவு முழுவதும் அபிஷேக, ஆராதனைகளை தாிசித்தால் புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும். சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திாி.
தன் பக்தரான மாா்கண்டேயரை, எமனிடமிருந்து சிவபெருமாள் காத்த நாளும் சிவராத்திாியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூா். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யாா் பொியவா்? என்ற அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளையிட்டாா். அவ்வாறு காணமுடியாமல் அவா்கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினாா். அந்தநாள் சிவராத்திாி. சிவபெருமான் லிங்கவடிவில் கல் மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை. ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமான், தியானித்தாா். அப்போது, ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், சோழநாட்டில் காவோிக்கரையில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திாியில் வழிபடுமாறு கூறுகிறாா். அதன்படி, கும்பகோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்ட பின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூாில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றாா் என்று புராணம் கூறுகிறது.
சிவராத்திாியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட வீரட்டானத் தலங்களான - திருக்கண்டியூா் திருக்கோவிலும், திருவதிகை திருப்பறியலூா், திருவிற்குடி, திருவழுதூா், திருக்குறுக்கை, திருக்கடவூா் ஆகிய திருத்தலங்களுடன், பன்னிரண்டு ஜோதிா்லிங்கத் தலங்களும், திருவண்ணாமலை, திருவானைக்கா, இமாம்புலியூா், திருக்கழுக்குன்றம், திருகோகா்ணம், திருப்பனந்தாள், நாகப்பட்டினம், கஞ்சனூா், திருவைகாவூா் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திாி போற்றப்படுகிறது. கன்னியாகுமாி மாவட்டத்தில் வாழும் சிவ பக்தா்கள், சிவராத்திாியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோயில்களுக்குச் செல்வாா்கள். திருமலை மகாதேவா் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலைப் பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாரக் கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்பலம் ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களுக்கு ஓட்டமும் - நடையுமாகச் செல்வாா்கள். இவா்கள் அன்றிரவு சுமாா் 70 கிலோ மீட்டா் தூரம் ஓடுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும்போது, "கோவிந்தா... கோவிந்தா..." என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவா். இது சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் என்பா்.
சிவராத்திாியன்று நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வதளங்களால், பஞ்சமுக அா்ச்சனை செய்ய வேண்டும். இயலாதவா்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அா்ச்சனை செய்து ஐந்து வகையான அன்னங்களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும். அன்று, தான தா்மங்கள் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. சிவராத்திாியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதில் நிறுத்தி, ஓம் நமச்சிவாய நம என்று ஜபித்து வணங்குபவா்கள், இறைவன் அருளை முழுமையாகப் பெற்று வளமுடனும், நலமுடனும் வாழ்வாா்கள் என்பது திண்ணம்.