Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ஒரு நாளுக்கு மேல் ... பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மங்கலதேவி கண்ணகி கோவில் விழா! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் விழா கோலாகலம்: பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மே
2012
10:05

மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், விளக்குகளால் ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில், காலை 5.50 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் அழகர் இறங்கினார்.சித்திரைத் திருவிழா ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது. பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை சாத்தப்பட்டு, கோவிலைச் சுற்றி வெட்டிவேர் சப்பரத்தில் உலா வந்தார்.அதிகாலை 4 மணிக்கு, தமுக்கம் கருப்பண சுவாமி கோவிலில், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின், ஒவ்வொரு மண்டகப்படியாக எழுந்தருளினார்.காலை 5.50 மணிக்கு, "கோவிந்தா... நமோ நாராயணா... என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, பச்சை பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வந்த அழகர், ஆற்றில் இறங்கி, திருக்கண் மண்டபத்தைச் சுற்றி வந்தார். அழகரை வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.அமைச்சர் செல்லூர் ராஜு, அறநிலையத்துறை செயலர் ராஜாராம், கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மேயர் ராஜன் செல்லப்பா உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.காலை 6.15 மணிக்கு, அறநிலையத்துறை கமிஷனர் மண்டகப்படிக்கு சென்ற அழகர், காலை 6.45 மணிக்கு புறப்பட்டார். பின், மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை 11.30 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அழகரை குளிர்விக்க தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணியளவில், அண்ணா நகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar