Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகா நீயே துணை.. வடபழனி கோயில் ... சத்குரு புத்தாண்டு வாழ்த்து சத்குரு புத்தாண்டு வாழ்த்து
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசு குறைந்ததால் தூய்மையானது கங்கை நதி
எழுத்தின் அளவு:
மாசு குறைந்ததால் தூய்மையானது கங்கை நதி

பதிவு செய்த நாள்

14 ஏப்
2020
11:04

லக்னோ : ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கங்கை நீரில் மாசு குறைந்து, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதாக, சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசியில்) கங்கை நதி பல்வேறு வகையில் தனது தூய்மையை இழந்து வருகிறது. மத வழிபாடு, மற்றும் சடங்கு முறைகளாலும் தண்ணீர் அசுத்தமாகிறது. மேலும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு இடையே, ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கை நதியில் கலப்பதால், நதி நீர், மிகவும் மாசு அடைந்துள்ளதாகவும், இதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாகவும் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். 21 நாள் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்தும் ஏராளமான கழிவு நீர், கங்கை நதியில் கலந்து, மாசை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்களும், வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால், கங்கை நதியில் கழிவுகள் கலப்பது முற்றிலும் குறைந்துள்ளது. ஹரித்வார் மற்றும் வாரணாசியில், இறந்தவர்களின் உடல்களை கங்கையில் துாக்கி வீசுவதும் குறைந்து உள்ளது. புனித நீராடுவதற்காக, கடந்த சில வாரங்களாக யாரும் வரவில்லை.

50 சதவீதம்: இது குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:கங்கை நதியில், மாசு முற்றிலும் குறைந்துள்ளது. எந்த கழிவுகளும் நதியில் கலப்பது இல்லை. இதனால், நதி நீரின் தரம் அதிகரித்துள்ளது. இப்போது மக்கள் குடிப்பதற்கு ஏற்ற வகையில் நீரின் தரம் உள்ளது. ஏற்கனவே இருந்த மாசில், 50 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக, உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், கங்கையில் நீரோட்டமும் அதிகரித்து உள்ளது. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் அல்லது தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தால், கங்கை நதி நீரின் தரம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar