Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ... பூசாரிகள் நிவாரண நிதி கமிஷனர் உத்தரவு பூசாரிகள் நிவாரண நிதி கமிஷனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி மடம் சார்பாக 4,000 பேருக்கு தினமும் உணவு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி மடம் சார்பாக 4,000 பேருக்கு தினமும் உணவு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2020
12:04

தி.நகர் : சிருங்கேரி மடம் சார்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில், 4,000 பேருக்கு, தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், சிருங்கேரி மடம் அமைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவதிப்படும் சாலையோர வாசிகள், தொழிலாளர்கள் என, 4,000 பேருக்கு, தினமும் சிருங்கேரி மடம் சார்பாக, மதிய உணவு வழங்கப்படுகிறது. மடத்தில் தயாரிக்கும் உணவுகளை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, வினியோகம் செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ., நட்ராஜ் மூலம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள, 60 குடிசை பகுதி மக்களுக்கும், ஆவடி, சத்சங்கம் மூலம், ஆவடி காட்டூர், அமிர்தாபுரத்தில் உள்ள, கண்பார்வையற்ற, 500 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது.தி.நகர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இதில், போலீசாருக்கு, இஞ்சி, லெமன் கலந்த பழச்சாறு வழங்கப்படுகிறது. இச்சேவை ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மே மாதம், 3 தேதி வரையும், அதற்கு பின் நீடித்தால், அப்போதும் தினமும் மதியம் உணவு வழங்கப்படும்.மேலும், கோடிக்கணக்கான, சிருங்கேரி மடம் பக்தர்கள், கொரோனா பாதிப்பு குறைய வேண்டும் என, தினமும் மூன்று முறை, துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம், பாராயணம் செய்வதாகவும், சிருங்கேரி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar