Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துாய்மை பணியாளர்களுக்கு சேவா பாரதி ... சீர்காழி குட்டியாண்டவர் கோயிலில் உண்டியல் உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு சீர்காழி குட்டியாண்டவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2020
02:04

கமுதி: கமுதி அருகே தங்கசிலை இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, ஆனையூர், முதுகுளத்துார் பகுதியில் மாந்திரீகம் பெயரில், பூமிக்கடியில் தங்க சிலைகள் இருப்பதாகவும், யாகம் நடத்தினால் கிடைக்கும் எனக்கூறி ஒரு கும்பல் மோசடி செய்கிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் உத்தரப்படி, உதவி எஸ்.பி., விவேக், டி.எஸ்.பி.,க்கள் ராஜேஷ், மகேந்திரன் தலைமையில் போலீசார் விசாரிக்கிறார்கள். முதுகுளத்துார் செல்வக்குமார், முருகராஜ், ஏனாதியை சேர்ந்த பெண் முத்து, கீழகாஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலையாரி மகாதேவன், உடந்தையாக இருந்த தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை வி.ஏ.ஓ., செல்லப்பாண்டியும் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினார். கமுதி அருகே தோப்படைபட்டியில் புதைத்து வைக்கப்பட்ட 6 ஐம்பொன் சிலைகள், யாகசாலை பூஜைக்கான நாணயங்கள், மாந்திரீக தகடுகள், மிளிரும் அலங்கார கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், சிலைகளின் காலம், மதிப்பு தெரியவில்லை. தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளனர். பதுக்கப்பட்ட சிலைகள் எத்தனை என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. கைதானவர்கள் ஐம்பொன், செம்பு சிலைகளை பதுக்கி வைத்து, தங்க சிலை இருப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபடுகிறார்கள். யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar