Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரனுக்கு அபிஷேக ... பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் சித்திரை திருவிழா ரத்து பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமசம்கார விழா
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமசம்கார விழா

பதிவு செய்த நாள்

03 மே
2020
11:05

நாகை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இல்லாமல் சமுதாய இடைவெளியுடன் கோவிலின் உள்ளே புகழ்வாய்ந்த எமசம்கார விழா தருமை ஆதீனம் முன்னிலையில் ஆகம முறைப்படி நடைபெற்றது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி அம்பாள் உடனாய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் எமதர்மர், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்தபோது, மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீது பட, அ வர் காலசம்ஹாரமூர்த்தி உருவெடுத்து எமனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். இதனை போற்றும் வகையில் யமசம்கார நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் நடை பெறும். அதன்படி கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்ற யமசம்ஹார நிகழ்ச்சியில் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் மண்டபத் திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யு ம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி ஆகம முறைப்படி கோயிலின் உள்ளே தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசி லாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பங்கேற்று சுவாமி தரிசனம்
செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar