Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாகேஸ்வரத்தில் விபூதி, ... கிரிவலப்பாதையில் வேலி: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் திவ்ய பிரபந்தம் ஓதுவதில் இளைஞர்கள் ஆர்வம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மே
2012
11:05

சென்னை : பெருமாள் கோவில்களில், தினசரி பூஜைகள், வார மற்றும் மாதாந்திர பூஜைகள், ஆழ்வார்களின் திருநட்சத்திர தினங்கள், பெருவிழாக்கள், சிறு விழாக்களில், வேத பாராயணம் மற்றும் திவ்ய பிரபந்தம் ஓதுதல் ஆகியவை நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணியில், திவ்ய பிரபந்தம் ஓதும் குழுவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், சித்திரைப் பெருவிழா நடந்து வருகிறது. இதில், காலை மற்றும் இரவில் பெருமாள் வீதியுலா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த வீதியுலாவில் முதலில், திவ்ய பிரபந்தம் ஓதும் குழுவினர் செல்கின்றனர். அவர்களை பின் தொடர்ந்து, பெருமாள் செல்கிறார். வேதம் ஓதும் குழுவினர், அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னைப் பல்கலை வைணவத் துறை தலைவர் வேங்கடகிருஷ்ணன் கூறியதாவது: ஆழ்வார்களின் அமுதத் தமிழ் மீது கொண்ட அளப்பரிய காதலால், அத்தமிழை பாடுவோர் பின்னால் பெருமாள் செல்கிறார். அந்த பெருமாளைத் தேடி, வேதம் பின் தொடர்கிறது என்பது மரபு. அதன்படி தான் வீதியுலாவில், திவ்ய பிரபந்தம் ஓதுவோர் முன்னர் செல்கின்றனர். திவ்ய பிரபந்தம் ஓதும் பணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில், 700 ஆண்டுகளாக இடையறாது நடந்து வருகிறது. பார்த்தசாரதி, அழகிய சிங்கர் ஆகியோரின் பெருவிழாக்களின் போதும், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் விழாக்களின் போதும், அத்யன உற்சவத்திலும் ஆக, ஐந்து விழாக்களில் இக்குழுவினர், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழுமையாக ஓதுகின்றனர். இவ்வாறு வேங்கட கிருஷ்ணன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar