Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பாதிப்பில் இருந்து மீள ... திருக்கடையூர் கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை திருக்கடையூர் கோயிலை திறக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
10:06

திருவனந்தபுரம்; மாதாந்திர பூஜைக்காக, சபரிமலை, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. எனினும், கோவிலில் வழிபட, பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. முடிவுகொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், நாடு முழுதும், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில், ஐந்தாவது முறையாக ஊரடங்கு, ஜூன், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி, பல தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை, ஜூன், 8ம் தேதி முதல் திறக்கலாம் என, தெரிவித்தது.இதையடுத்து, பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.இந்நிலையில், கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில், ஆனி மாத பூஜைக்காக, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. கோவிலில் வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப் பட்டது.

இது குறித்து, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:சபரிமலை கோவில் நடை, ஆனி மாத பூஜைக்காக, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், கோவிலில் வழிபட, பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.சபரிமலை தந்திரி மற்றும் கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுடன் பேசிய பின், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஆபத்துசபரிமலை கோவில், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை திறக்கப்படும். தினமும், அன்றாட பூஜைகள் மட்டும் நடத்தப்படும். 19ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடக்க இருந்த, அய்யப்பன் ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சபரிமலை தந்திரி, மோஹனரரு கூறுகையில், கேரளாவில் வைரஸ் பரவல், சமீபகாலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால், பக்தர்களை கோவிலில் வழிபட அனுமதிப்பது ஆபத்தாக முடியும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar