Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் தரிசனம் ... ராமர் கோவில் கட்டுமான பணி; அயோத்தியில் ஆதித்யநாத் ஆய்வு ராமர் கோவில் கட்டுமான பணி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2020
11:06

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, ஆனி திருமஞ்சன விழா, ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இதில், ஆனி உத்திர நட்சத்திரத்தின்போது, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமி சமேத நடராஜருக்கு, ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

நடப்பாண்டு, கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கோவில் இரண்டாம் பிரகாரத்தில், சிவகாமி சமேத நடராஜர் எழுந்தருளினர். ஆனி திருமஞ்சன விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்கள் காணும் வகையில், ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.சிதம்பரம்கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம், 19ம் தேதி துவங்கியது.தேர் மற்றும் தரிசன விழாவில், 150 தீட்சிதர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், விழாவை நடத்த, ௨௫ தீட்சிதர்களுக்கு மட்டும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு அபிஷேகம் துவங்கியது. வழக்கமாக, நடராஜருக்கு, 5,௦௦௦ லிட்டர் பால் அபிஷேகம் நடக்கும். நேற்று, 500 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.மாலை, 4:15 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜரும், சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே சித்ரசபைக்கு சென்றனர். அங்கு, ஆனி திருமஞ்சன விழா நடந்தது. பக்தர்கள் இன்றி, விழா எளிமையாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar