Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோவிலில் ... மக்கள் வழிபடும் புலிக்குத்திக்கல்: பாதுகாக்க வலியுறுத்தல் மக்கள் வழிபடும் புலிக்குத்திக்கல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலிங்க வடிவ கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சிவலிங்க வடிவ கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
04:07

மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா வடக்கு கண்ணாடிப்புத்தூர் பகுதியில் சிவலிங்க வடிவ கல்வெட்டு மற்றும் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மடத்துக்குளம் பகுதியில் ஆயிரம் ஆண் டுகளை, கடந்த,வரலாற்று சிறப்புமிக்க மிகப்பழமையான கோவில்கள் உள்ளன. சில கோவில்கள் இடிந்து புதையுண்டு போயுள்ளன. இப்படி அழிந்த கோவில்களின் சிதிலங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. வடக்கு கண்ணாடிப்புத்தூர் கயிலாயநாதர் கோவில் பகுதியில் லிங்க வடிவ கல்வெட்டு பராமரிப்பு இன்றி புதர்களுக்கு மத்தியில் தரையில் கிடக்கிறது.

இதை ஆய்வு செய்த ஜி.வி.ஜி., கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கற்பகவல்லி மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில் " கரை வழி நாட்டு தொன்மையான கிராமங்களி ல் கண்ணாடிப்புத்தூர் ஒன்றாகும். இதன் முந்தைய பெயர் வீரபாண்டியசதுர்வேதி மங்கலம் என வரலாற்று தகவல் தெரிவி க்கிறது. இங்கு காணப்படும் சிவலிங்க வடிவ கல்வெட்டு மற்றும் எழுத்துகள் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை யை குறிக்கிறது. அன்றைய காலத்தில் இந்த கல்வெட்டுக்கள் நடப்பட்டிருந்த விளைநிலங்கள் சிவன் கோயிலுக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. விளையும் தானியங்கள், கோவில் பூஜைக்கும், பூஜை செய்வோரும் பயன்படுத்திக் கொள்ள உரிமையானது எனவும் இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. கோவிலுக்கு முன்புறம் காணப்படும் கல்வெட்டில் அவ்வூரில் வசித்த ஆனந்த ஈச்சுவரம் உடையார் இந்த கோவிலுக்கு திருவமுது செய்வதற்காக நெல் தானம் வழங்கியதையும் குறிப்பிடபட்டுள்ளது. பழமையான அழிந்துபோன கோவில் "திருவானந்திச்சுவரமுடையார்" ஆலயம் என கல்வெட்டு தகவல் உறுதி செய்கிறது " என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar