Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்திக்கு குமரியில் இருந்து ... சதுர்த்தியில் வீடுதோறும் விநாயகர் வழிபாடு சதுர்த்தியில் வீடுதோறும் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் 4 மாதமாக நடக்காத கட்டளை பூஜைகள்
எழுத்தின் அளவு:
கோவில்களில் 4 மாதமாக நடக்காத கட்டளை பூஜைகள்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
01:07

 மதுரை : ஊரடங்கால் கோவில்களில் திருவிழாக்கள், பூஜைகள் நடக்கும் நிலையில், கட்டளை படி பூஜைகள் நடத்தப்படாமல் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் உட்பட பெரும்பாலான கோவில்களில், மன்னர்கள் காலத்தில் இருந்து கட்டளை படி பூஜைகள்  நடத்தப்படுகின்றன. மன்னருக்கோ, அரசுக்கோ உதவிய வகையில், அவர்களை கவுரவிக்கும் வகையில், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு, செப்பு பட்டய சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன்படி, திருவிழாக்களில் கட்டளைதாரர்களான அக்குடும்பத்திற்கு, கோவில் சார்பில்  மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல், செல்வந்தர்கள், ஜமீன்தார்கள், தங்கள் நிலம், கட்டடங்களை கோவில்களுக்கு எழுதி வைத்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில், பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இவர்களின் வாரிசுகள் நிரந்தர கட்டளைதாரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் கட்டளைப்படி பூஜைகள் நடத்தப்படுவதில்லை. பாரம்பரியமாக நடந்து  வரும் இப்பூஜைகள் நடக்காதது, கட்டளைதாரர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. கட்டளைதாரர்கள் கூறியதாவது:தற்போது, அழகர்கோவில் ஆடி உற்சவ விழா நடக்கிறது.

இதற்காக, கோவிலுக்குள் உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. அதேசமயம் நிரந்தர கட்டளைதாரர்களான எங்களை புறக்கணிப்பது நியாயமில்லை. இதேபோல் தான், எல்லா கோவில்களிலும் நடக்கிறது. கட்டளைதாரர்கள் அரசின் விதிகளை பின்பற்றி, பூஜையில்  பங்கேற்க தயாராக உள்ளோம். அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar