காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறாள்.இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றால் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு திருநள்ளாறு கோவில் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு பால்.தயிர். சந்தனம். இளநீர் உள்ளிட்ட பலவகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுபோல் ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.