Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் வண்ணம் தீட்டும் ... அரங்கநாதர் கோவிலில் ஆவணி அவிட்டம் கோலாகலம் அரங்கநாதர் கோவிலில் ஆவணி அவிட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
எழுத்தின் அளவு:
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
11:08

சென்னை:ராமர் கோவில் பூமி பூஜை விழாவில், அனைவரும் இருந்த இடத்திலேயே,108 முறை, ராம மந்திரத்தை ஜெபித்து, ஆத்மார்த்தமாக பங்கேற்று, பிரார்த்தனை செய்வோம், என காஞ்சி மடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:காஞ்சி சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில்,ஏகாம்பரநாதர், மாமரத்தடிபெருமாள் கோவில், விஷ்ணு காஞ்சி ஆகிய இடங்களில்இருந்து, புனித மண் சேகரிக்கப்பட்டு, விமானத்தில்அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.பூமி பூஜைக்கு தேவையான வாஸ்து பொருளான, காஞ்சிபுரம், சங்குபாணி விநாயகர் கோவிலில் இருந்து, மரத்தினால் செய்யப்பட்ட கருங்காலி காதீரம், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, இரண்டு செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பூமி பூஜைக்கு உபயோக படுத்தக்கூடிய, ஜெயா, நந்தா, பத்ரா, பவித்ரா, பூர்ணா பூஜை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ராமர், தமிழகத்தில் சஞ்சாரம் செய்துள்ளார். சீதாதேவிக்கு ராமேஸ்வரம் ஷேத்ரத்தை காண்பித்து, அதன் பெருமையை விளக்கி இருக்கிறார்.தமிழகத்தில், பல ராமர் கோவில்கள் சிறப்பாக அமைந்துள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ராமாயணத்துடன் தொடர்புடையதாக உள்ளன.

காஞ்சி அடுத்த திருப்பக்குழி, ராமபிரான் ஷேத்ரமாக விளங்குகிறது.தமிழகத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு, மேலும் வலுப்பெற, இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்;நாம் பூஜிக்கும் காமதேனுவான கோமாதாவை பாதுகாக்க வேண்டும் என்பது, ஜெயேந்திரரின் விருப்பம். அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில், மக்கள் இருந்த இடத்திலேயே ஆத்மார்த்தமாக பங்கேற்று, 108 முறை, ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் ராம மந்திரத்தை ஜெபித்து, பிராத்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar