Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-3 நளதமயந்தி பகுதி-5 நளதமயந்தி பகுதி-5
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2010
03:12

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். குருவியைப் பார்த்தால் காலையிலேயே உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இப்படியாக, மனிதர்கள் இயற்கையைப் பார்த்து இந்தக் காலத்தில் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், மாறுபட்ட குணமே இல்லாத, நிடதநாட்டின் மக்கள் கொண்ட ஒற்றுமையைப் பார்த்து பருந்தும், கிளியும் கூட ஒற்றுமையாக இருந்தது. மனிதனின் வாழ்வைப் பார்த்து இயற்கை அங்கே பாடம் கற்றது. எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள்! ஒருநாள், நளன் நந்தவனத்துக்கு மலர் பறிக்கத் தன் தேரில் சென்றான். தேர் எழுப்பிய புழுதியை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் தலையில் சூடிய பூக்களில் இருந்து வழிந்த தேன் நனைத்து அடக்கியது. நந்தவனத்தை அவன் அடைந்ததும், அங்கிருந்த தடாகத்தில், இதுவரை அவன் பார்த்திராத அன்னப்பறவையை அவன் கண்டான். அதன் மாசுமருவற்ற வெண்மை நிறம், அங்கு நின்ற பச்சை செடிகளில் பிரதிபலித்து, தோட்டமே வெண்மையானது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. அதன் கால்கள் சிவப்பாக இருந்தன. அதன் பிரதிபலிப்பில் தடாகத்து நீரும் சிவப்பாக மாறியது போல் தோற்றம் கொண்டது. அந்த அழகை ரசித்த நளன், அந்த அன்னத்தைப் பிடிக்க ஆசை கொண்டான். அங்கு நின்ற பணிப்பெண்ணிடம், அழகு மங்கையே! அதோ! தடாகத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த அன்னத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மெல்லிய <உன் கைகளும் அதன் மீது பட்டு நோகாத வகையில் பிடித்து வா,  என்றான்.பறவையைப் பிடிக்க ஆசை. அவனே கூட அதை எட்டிப் பிடித்து விடுவான். அன்னத்தின் இறக்கையைப் பிடித்து இழுத்தால் அவன் கையில் சிக்கிவிடாதா என்ன! ஆனால், அது தன் கைபட்டு நொந்து போவதை விரும்பாமல், ஒரு பெண்ணின் மென்மையான கையால் தூக்கி வரச்சொல்கிறான். இது நளனின் கருணையை வெளிப் படுத்துகிறது.

அவனது இரக்க சுபாவத்தைக் கண்ட அன்னம் அவனிடம் தஞ்சம் புக எண்ணியது. கரையோரமாக மிதந்து வந்து, தானாகவே அந்த பெண்ணின் கையில் அடைக்கலமானது. அவள் மகிழ்ச்சியுடன் தன் மன்னன் முன்னால் அதை விட்டாள்.அது அவனைப் பார்த்து பேச ஆரம்பித்தது.ஒரு பறவை பேசுகிறதே! நம்ப முடியவில்லையே! கிளிக்கு எப்படி பேசும் சக்தி உண்டோ. அதுபோல், கலைவாணியின் சின்னமான அந்த அன்னமும் திக்கித் திக்கிப் பேசியது.மகராஜனே! நான் சொல்வதைக் கேள்! எட்டுத்திக்குகளிலும் உன் பெயரும் புகழும் பரவியிருப்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட மாவீரனான உன் தோள்களில் தவழ்ந்து விளையாட உனக்கேற்ற மனைவி வேண்டுமல்லவா! அப்படிப்பட்ட ஒருத்தியை நான் அறிவேன். அவள் பெயர் தமயந்தி. அழகில் சுந்தரி, என்று சொல்லும் போதே, யார் அந்த தமயந்தி? அந்த அன்னத்தைப் பற்றி இந்த அன்னம் சொன்னவுடனேயே அவள் என் மனதை ஆக்கிரமிக்கக் காரணம் என்ன? அவளை நான் முன் பின் பார்த்ததில்லையே! அதற்குள் எப்படி மனதில் புகுந்தாள் அந்த சொப்பனசுந்தரி, என்று திகைத்தான் நளன். நம் எல்லோர் வாழ்வும் முந்தைய பிறவியின் தொடர்ச்சி என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தால், நம் சொந்தங்களைத் தேடி அவர்கள் எங்கிருந்தாலும் போய் விடுவோமே! இறைவன் ஏனோ அதற்கு அனுமதிப்பதில்லை. நளன் முற்பிறவியில் வேடனாகவும், தமயந்தி அவன்  மனைவியாகவும், அந்த அன்னம் தங்களைத் தேடி வந்த முனிவர் என்பதையும் அவன் அறியமாட்டானே!அன்னம் தன் பேச்சைத் தொடர்ந்தது. நளனே! உன் முகத்தைப் பார்த்தாலே நான் சொல்லும் பேரழகி உன் மனதுக்குள் புகுந்துவிட்டாள் என்று தெரிகிறது. அவள் விதர்ப்ப தேசத்து இளவரசி. அவளது குணத்தைப்பற்றி கூறுகிறேன், கேள், என்றது. தன்னையும் மறந்து அந்தப் பறவை பேசுவதைக் கவனித்தான் நளன்.

அழகில் மன்மதனே! உன் ரதி தமயந்தி அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களும் அவளுக்கு நால்வகைப் படைகளாக காவல் நிற்கின்றன. அவளது மெய், வாய், கண், மூக்கு, செவியை ஐந்துவித அமைச்சர்களாகக் கருதி, அவற்றிடம் ஆலோசனை கேட்ட பிறகே எதையும் செய்வாள். ( புலன்களை அதன் வழியில் விடாமல், அவற்றை தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறாள் என்பது பொருள்) அவள் அணிந்துள்ள சிலம்பு முரசைப் போல் ஒலிக்கும். வேலையும், வாளையும் இணைத்துச் செய்யப்பட்டவையோ எனக் கருதுமளவு, அவளது கண்கள் கூர்மையானவை. அவளது முகம் நிலாவைப் போல் பிரகாசமாக இருக்கும். அவளை பெண்களின் அரசி என்று சொல்லலாம், என்ற பறவையை அன்புடன் தடவிக்கொடுத்தான் நளன்.அவனது சூடான கைகள் பட்டு இதமும் சுகமும் அடைந்த அந்த அன்னப்பறவை, தமயந்தியின் அழகை மேலும் வர்ணித்தது.நளனே! அவளது இடையழகைப் பற்றி சொல்கிறேன் கேள்! வண்டுகள் பறந்தாலே போதும், அவற்றின் சிறகுகள் எழுப்பும் காற்றைத் தாங்காமல் அவளது சிற்றிடை வளைந்து போகும். அப்போது அவளது கால்கள் அசைந்து அதில் அணிந்துள்ள தண்டைகள் குலுங்கும். அவளது கூந்தல் அடர்ந்து நீளமாக இருக்கும். மன்மதன் காதல் கணை தொடுக்க வேண்டுமானால், அவளது பிறை போன்ற நெற்றியில் தான் தன் மலரம்பை கூர்மை செய்து கொள்வதாக ஊருக்குள் ஒரு பேச்சு. குரலைக் கேட்க வேண்டுமே! அவள் செந்தமிழ் தேன்மொழியாள், இவ்வாறு அன்னம் தான் கண்ட தமயந்தி என்னும் அன்னத்தைப் பற்றி சொல்லிமுடிக்கவும், அவளைப் பார்க்காமலே மனதுக்குள் காதல் கோட்டை கட்டி விட்டான் நளன். மணந்தால் தமயந்தி என்னும் நிலைக்கு வந்துவிட்ட அவனது மனம் அவளை நேரில் காண வேண்டுமெனத் துடித்தது. அத்துடன், அந்த அன்னம் அவளைப் பற்றி தன்னிடம் இந்தளவுக்கு சிபாரிசு செய்வானேன் என்று எண்ணி குழப்பமடைந்தது.அதைத் தீர்த்துக் கொள்ளஅன்னமே! தமயந்தியைப்  பற்றி இந்தளவுக்குப் புகழ்ந்தாயே! அவளுக்கும், உ<னக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டான் நளன்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 
temple news
மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar