Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப ... அழிவின் விளிம்பில் சிதிலமடைந்த ராமாயண சித்திர சாவடி அழிவின் விளிம்பில் சிதிலமடைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நுாற்றாண்டு கண்ட அய்யனார் கோயில் சுடுமண் சேமக்குதிரை
எழுத்தின் அளவு:
நுாற்றாண்டு கண்ட அய்யனார் கோயில் சுடுமண் சேமக்குதிரை

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
10:08

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே லாந்தை அய்யனார் கோயிலில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட சேமக்குதிரைகள் 100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இதுபோன்று வேறு எங்கும் காண்பது அரிது, என கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு தெரிவித்தார்.அவர் கூறியது:

கிராமங்களில் மக்கள்காவல் தெய்வமாக வணங்கும் அய்யனாருக்குவாகனமாக சேமக்குதிரைகள் செய்துவைப்பர். நேர்த்திக்கடனாக சிறிய மண் குதிரைகளையும் செய்து வைப்பர்.இந்த மண் குதிரைகள்நீண்ட காலம் நிலைத்து இருப்பதற்காக இரும்பு கம்பிகளைக் கொண்டு உள்ளீடு செய்து சிமென்ட் ஜல்லி கலவைகளால் குதிரையை உருவாக்குவர்.அப்படி செய்தாலும் அவை சிதிலமடைந்து பராமரிப்பு செய்யும் நிலை ஏற்படுகிறது.

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் விலாங்காருடைய அய்யனார் கோயிலில் சேமக்குதிரைகள் மண்ணால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. தற்போதும்நுாறு ஆண்டுகளை கடந்து இவை கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. பழங்கால வரலாற்றை அறிய அகழாய்வில் கண்டறியப்படும் மண்பாண்டங்களே உதவுகின்றன. அந்த வகையில் பல நுாறு ஆண்டுகளாக இந்த மண் குதிரைகள் நிலைத்திருப்பதாக உள்ளது. இக்குதிரைகளை மண் வினைஞர்களான வயிரவனேந்தல் சாத்தையா, உரத்துார் நாகலிங்கம், லாந்தை உடையார் மற்றும் அங்குள்ள மண் வினைஞர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ளனர். இக்குதிரைகள் இவ்வூருக்குள் செல்வோரின் கண்களை கவர்வதுடன் மன அமைதி ஏற்படுத்துகிறது. ஊரின் அடையாளமாக காட்சியளிக்கின்றன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar