Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நுாற்றாண்டு கண்ட அய்யனார் கோயில் ... 18 லட்சம் நாம ஜபம்: பக்தர்களுக்கு அழைப்பு 18 லட்சம் நாம ஜபம்: பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழிவின் விளிம்பில் சிதிலமடைந்த ராமாயண சித்திர சாவடி
எழுத்தின் அளவு:
அழிவின் விளிம்பில் சிதிலமடைந்த ராமாயண சித்திர சாவடி

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
10:08

மதுரை: மேலுார் நரசிங்கம்பட்டி கிராம பெருமாள் மலை அடிவாரத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டிய ராமாயண தொடர் ஓவியங்கள் நிரம்பிய சித்திர சாவடி மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருந்து தொல்லியல் துறை பாதுகாக்க ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். கீழடி, கொந்தகையில் அகழாய்வு நடக்கும் நிலையில் மதுரையை சுற்றி பழங்கால பானைகள், அணிகலன்கள், கல்வெட்டுக்கள், ஈமக்காடுகள், நெடுங்கற்கள் அதிகளவில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் நரசிங்கம்பட்டி சித்திர சாவடிபாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கூறியதாவது: நாயக்கர் காலத்தில் கோயில்களை விரிவாக்கம் செய்து மண்டபங்கள் கட்டிய போது சித்திர சாவடி கட்டியிருக்கலாம். இதில் ராமாயண தொடர் ஓவியங்கள் வரைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 16ம் நுாற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து இதுபோன்ற ஓவியங்கள் கிடைக்கின்றன. அழகர்கோவில் வசந்த மண்டபம், ராமநாதபுரம் மற்றும் போடி அரண்மனை, புதுக்கோட்டை கோயில்களில் ராமாயண தொடர் ஓவியங்கள் உள்ளன.உலர் சுவரில் டெம்ப்ரா, ஈர சுவரில் பிரஸ்கோ முறையில் ஓவியம் வரைவர். மூலிகை ஓவியம் காலப்போக்கில் அழியும் என்பதால் இந்த சாவடியில் மண், கல்லில் எடுத்த வண்ண பொடி கொண்டு டெம்ப்ரா ஓவியம் வரைந்துள்ளனர். இதை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆவணம் செய்துள்ளது. வரலாற்று சிறப்புள்ள சித்திர சாவடியை புனரமைத்து ஓவிய அளவுகளை டிரேசிங் செய்து பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar