Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் தரிசனத்திற்கு ... அன்னையே உன்னை தரிசிக்க புண்ணியம் செய்தோம்* பெண்கள் மகிழ்ச்சி அன்னையே உன்னை தரிசிக்க புண்ணியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவா... சக்தி கொடு! கோவில்கள் திறப்பு : சமூக இடைவெளி கடைபிடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
இறைவா... சக்தி கொடு! கோவில்கள் திறப்பு : சமூக இடைவெளி கடைபிடித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 செப்
2020
01:09

வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.கடந்த மாதம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள கோவில்களை திறக்க அரசு உத்தரவிட்டது. மற்ற கோவில்களும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில், இம்மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் அனைத்து கோவில்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனால், நேற்றுமுன்தினம் கோவில்களில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வெள்ளைக்கோடு வரையப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தையடுத்து, நேற்று, பக்தர்கள் ஆர்வமாக சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி, இறைவனை வழிபாடு செய்தனர்.

கோவில்களில் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின், கிருமிநாசினி வழங்கி கைகளில் தடவிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கால்களை கழுவிய பின், கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தனர். பக்தர்கள், 20 பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூறுகையில், ஆறு மாதங்களாக கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தற்போது, கோவிலுக்கு வந்து இறைவனை தரிசனம் செய்த பின், நிம்மதியாக இருக்கிறது. கொரோனா தொற்று நீங்கி, அமைதி திரும்ப வேண்டுமென, வேண்டுதல் வைத்துள்ளோம், என்றனர்.

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே நுழைந்ததும், கோவில் ஊழியர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம், வெப்ப அளவு பரிசோதித்தனர். சானிடைசர் வழங்கப்பட்டு, கைகள் சுத்தம் செய்ய தனியாக தண்ணீர் வசதி செய்து, கால்களை கழுவி வர அறிவுறுத்தப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு, வழிபட அனுமதியளிக்கப்பட்டது. பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கவில்லை. கவர்களில் வைக்கப்பட்டிருந்த, திருநீறு பிரசாதத்தை பக்தர்கள் எடுத்துச்சென்றனர்.அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள, அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அருவிக்கு செல்ல தடைதிருமூர்த்திமலையில், மலைமேல், 930 மீட்டர் உயரத்தில், பஞ்சலிங்கம் அருவி உள்ளது. ஊரடங்கு காரணமாக, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கோவில்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதியில்லை. மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கவில்லை.


வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில் கோவில்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் கைகளுக்கு சானிடைசர் தெளிக்கப்பட்டது. கைகளை நன்றாக சுத்தம் செய்த பின், சுவாமி தரிசனத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மாத இடைவெளிக்கு பின், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். -- நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar