Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனிக்கிழமை1: வேங்கடமலை ... பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து! பக்தரிடம் கரிசனம் காட்டாத அறநிலையத்துறை பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
அவிநாசி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

19 செப்
2020
02:09

அவிநாசி: போலீசாரின் அறிவுறுத்தலுக்கேற்ப, அவிநாசியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் திருக்கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மன் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணா கோவில் ஆகியவை உள்ளன.

இக்கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை பூஜை சிறப்பாக நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அவிநாசி டி.எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், கோவில் செயல் அலுவலர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உதவி ஆணையர் வெங்கடேஷ் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புரட்டாசி சனிக்கிழமையில் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவர். அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும். அதேநேரம், கோவிலிலிருந்து தொற்றுப் பரவல் வந்து விடக்கூடாது என்பதற்காக, புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்தை ரத்து செய்ய போலீசார் அறிவுறுத்தலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவிநாசி ரோட்டோரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், 19ம் தேதி (நாளை), 26 மற்றும் அடுத்த மாதம், 10, 17 ஆகிய தேதிகளில், புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள், ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar