Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருஷநாடு அருகே 18ம் நுாற்றாண்டு ... சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி கடைசி சனி: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி கடைசி சனி: திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 அக்
2020
04:10

ஈரோடு: புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மூலவர், ஆதிசேஷன் மீது, அனந்த சயன கோலத்திலும், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கல்யாண மண்டபத்தில், லட்சுமி நாராயணராக தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

* பவானியை அடுத்த பெருமாள் மலையில், மங்களகிரி பெருமாள், திருப்பதி வெங்கடஜலபதி அலங்காரத்தில், காட்சியளித்தார். இதேபோல் அந்தியூர் பேட்டை பெருமாள், கோட்டை வரதராஜ பெருமாள் கோவில்களில், புரட்டாசி கடைசி சனி வழிபாடு, உற்சாகத்துடன் நடந்தது.

* புன்செய்புளியம்பட்டி அருகே, கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவிலில், அதிகாலை மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. காலையில் சிறப்பு அலங்கார பூஜையில், திம்மராயப் பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர். சர்ப்ப வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்தருளி, கோவில் உலா நடந்தது. தாசர்களுக்கு, அரிசி படி வழங்கி, பக்தர்கள், சிறப்பு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar