Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கரத தரிசனம் எப்போது? பழநி ... புரட்டாசி கடைசி சனி: திரளான பக்தர்கள் தரிசனம் புரட்டாசி கடைசி சனி: திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருஷநாடு அருகே 18ம் நுாற்றாண்டு நடுகல்
எழுத்தின் அளவு:
வருஷநாடு அருகே 18ம் நுாற்றாண்டு நடுகல்

பதிவு செய்த நாள்

11 அக்
2020
04:10

 போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ. கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் மாணவர்கள் வருஷநாடு அருகே கடமலைக்குண்டில் கி.பி.18ம் நுாற்றாண்டை சார்ந்த புலிகுத்திப்பட்டான் என்ற நடுகல்லை கண்டு பிடித்துள்ளனர். இக்கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர் மாணிக்கராஜ், ஆய்வு மாணவர்கள் ராம்குமார், கோபி, கண்மணி முத்து, கருப்பையா, சதீஷ் ஆகியோர் கல்வெட்டுகள் கற்கள் மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணிக்கராஜ் கூறியதாவது: கடமலைகுண்டு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது தகவலின்படி அப்பகுதியில் வரலாற்று தேடல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் கி.பி.18 ம் நுாற்றாண்டை சார்ந்த புலிகுத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. வருஷநாட்டை சுற்றியுள்ள ஊர்களில் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் அழநாடு பிரிவின் கீழ் கடமலைகுண்டு இருந்தது. மலையும் மலை சார்ந்த இடமாக உள்ளதால் காட்டு மாடு, விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்த காலத்தில் புலி அவற்றை கொன்று வந்துள்ளது. புலியால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வீரன் ஒருவன் அதனுடன் சண்டையிட்டு புலியை கொன்று தானும் வீர மரணம் அடைந்துள்ளான். அந்த வீரனின் உயிர் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நினைவு கூறும் படியாக இந்த நடுகல் அமைந்துள்ளது. இதில் வீரன் தனது வலது காலை வலப்பக்கமாக முன்வைத்து இடக்காலை பின்பக்கமாக ஊன்றி நிற்கும் ஆசனமாக ஆலிடாசனத்தில் நின்றுள்ளான். தன்னை நோக்கி பாய்ந்து தாக்கும் புலியின் வாயில் வீரன் தனது இரு கைகளால் அழுத்தி வேல் கம்பால் குத்துவது போன்ற சண்டைக் காட்சியை அழகாக சிற்பமாக செதுக்கியுள்ளனர். கொண்டையும் காதில் குண்டலங்களுடன் வீரனது இடது பக்க இடையில் வாள் ஒன்றும் சொருகப்பட்டிருக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar