Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி ... திருக்கழுக்குன்றத்தில் கன்னியா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் நவராத்திரி கொலு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் நவராத்திரி கொலு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

22 அக்
2020
05:10

 உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் ஐந்தாம் நாளாக நவராத்திரி கொலுவில் லட்சுமி தேவியை முதன்மையாக அழைத்து வழிபாடு நடந்தது.

நவராத்திரி கொலுவில் முதல் மூன்று நாட்கள் துர்கை தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியை அழைத்தும் வீடுகளிலும், கோவில்களிலும் வழிபடுகின்றனர். உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கொலு அமைத்து நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபட்டு செல்கின்றனர்.மடத்துக்குளம் -மடத்துக்குளம்பகுதியில், நவராத்திரியையொட்டி, பல வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். மடத்துக்குளம், நஞ்சையபிள்ளைபுதுார் பகுதியில் கொலு வைத்து நவராத்திரி வழிபாடு செய்கின்றனர்.

ஆனைமலைகோட்டூர் மலையாண்டிபட்டிணம் கோதண்டராமர் கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் பக்தர்கள் சார்பில், கோவில் வளாகத்தில், மாகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன், சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், சீதை, ரங்கநாதர் உள்பட மொத்தம், 310க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், பொம்மைகளை கொலுவில் வைத்து வழிபடுகின்றனர். கொலுவில், தினமும் பக்தர்கள் முளைப்பாரி வைத்து, பக்தி பாடல்கள் பாடி, விமரிசையாக விழாவை கொண்டாடி வருகின்றனர். கோதண்டராமர் மற்றும் சீதைக்கு, தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar