Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 கடகம் :  குரு பெயர்ச்சி 2020 - 2021 கடகம் : குரு பெயர்ச்சி 2020 - 2021
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
மிதுனம் : குரு பெயர்ச்சி 2020 - 2021
எழுத்தின் அளவு:
மிதுனம் :  குரு பெயர்ச்சி 2020 - 2021

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:10

மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : பொறுமையே பெருமை தரும்

பொது : இதுநாள் வரை இருந்து வந்த குருவின் பார்வை விலகுவதாலும் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் குரு அமர்வதாலும் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க உள்ளீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமைவதால் மன வருத்தம் உண்டாகும். நட்சத்திர அதிபதியாக செவ்வாயையும் ராசிநாதனாக புதனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் காலம் சற்று சோதனையைத் தரக்கூடும்.

நிதி : செலவினைக் கட்டுப்படுத்த சிக்கன முயற்சியைக் கடைபிடித்தாலும் வீண்விரயம் கூடுவதாக உணர்ந்து வருவீர்கள். இதனால் மனதிற்குள் ஒரு விதமான வெறுப்புணர்வு குடிபுகலாம். எது அவசியம், எது அநாவசியம் என்பதை முடிவெடுக்க இயலாமல் செலவழிக்கும் விஷயத்தில் தடுமாற்றம் காண்பீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு.

குடும்பம் : குடும்பத்தினர் மீது அதிக பாசம் வைத்திருக்கும் நீங்கள் அவர்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் செயல்படவில்லையே என்று மன வருத்தம் கொள்வீர்கள். பிரதிபலன் எதிர்பார்த்து அது கிடைக்காத பட்சத்தில் மனதில் விரக்தியான எண்ணங்களுக்கு இடமளித்து வருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனநிலை புரியாது தவிப்பர். உங்களுடைய எண்ணத்தை மறைக்காமல் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதால் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.

கல்வி : தற்போதைய சூழலில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது போல் தெரிந்தாலும் மார்ச்  மூன்றாம் தேதி முதல் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தேர்வு நேரத்தின்போது நேரம் நன்றாக இருப்பதால் கவலை இல்லை. இருந்தாலும் அன்றன்றைய பாடங்களை அவ்வப்போது படித்து புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது. ஆன்லைன் வகுப்புகளில் சிரமத்தினைக் காணும் மாணவர்கள் தனிப்பயிற்சி வகுப்பினில் ஆசிரியரிடம் தயங்காமல் கேள்வி கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்.

பெண்கள் : பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளைக் கேட்டு நடப்பதை விடுத்து உங்கள் மனதிற்கு சரியென்று படுவதை செய்துவந்தால் நிம்மதியாக இருக்கலாம். அநாவசிய சந்தேகங்கள் குடும்பத்தில் பிரச்னையைத் தோற்றுவிக்கும். மனதில் உண்டாகும் சந்தேகங்களை வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது.

உடல்நிலை : ரோக ஸ்தானத்தில் கேதுவின் அமர்வு பல்வேறு பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வலுப்பெறும். குருவின் பலமும் குறைவதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம் தேவை. உடம்பில் உண்டாகும் மாறுதல்களை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மனக்கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலும்.

தொழில் : ஜீவன ஸ்தான அதிபதி குரு எட்டில் அமர்வதால் தொழில்முறையில் இடைஞ்சல்களைக் காண உள்ளீர்கள். சுயதொழில் செய்வோர் யாரையும் நம்பாது தனித்து செயல்பட வேண்டியது அவசியம். பணியாளர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் மூலம் சிரமத்தினை சந்திப்பார்கள். அவர்கள் செய்யும் தவறு உங்களைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கக்கூடும். மேலதிகாரியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்கள் புதிய முயற்சியினை மேற்கொள்ள சிறிது காலம் காத்திருக்கவேண்டியது அவசியம்.
பரிகாரம் : தினமும் பூஜையறையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்லி வாருங்கள்.

திருவாதிரை : நிதானமே நிம்மதிக்கு வழி

பொது : அஷ்டம ஸ்தானத்தில் வந்து அமரும் குருவினால் பல்வேறு வழிகளில் தடையினை எதிர்கொள்வீர்கள். நட்சத்திர அதிபதி ராகுவும் 12ல் நீசம் பெறுவதால் அவ்வப்போது செய்வதறியாது தடுமாற நேரிடும். ராசிநாதன் புதனின் சஞ்சார நிலையில் உண்டாகும் மாற்றம் மட்டுமே உங்களைக் காக்கும். வரும் ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உங்கள் நலம்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது.

நிதி : சிரமமான சூழல் நிலவுவதால் நிதி நிலையில் பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. சொத்து சேர்க்கும் முயற்சியில் தடை உண்டாகக் காண்பீர்கள். கடன் பிரச்னைகள் தலையெடுக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சிறப்பு கவனம் தேவை. யாரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

குடும்பம் : வெளியில் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக உண்டாகும் கோபத்தினை குடும்பத்தினரிடம் காட்டுவதால் அவர்களது வெறுப்பிற்கு ஆளாகலாம். குடும்பத்தினரின் தேவைகளை உணர்ந்து செயல்படும் நீங்கள் அவர்களது மனநிலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் அவ்வப்போது வீண் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் குறித்த நேரத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

கல்வி : மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேர்வின் போது விடைகளை தெளிவாக எழுத வேண்டியது அவசியம். அவசர அவசரசமாக எழுதும் எழுத்துக்கள் விடைகளை திருத்தும் ஆசிரியருக்குப் புரியாமல் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உண்டு. நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கணிதவியல், கணிப்பொறி அறிவியல் பாடங்களைச் சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : கணவருடன் உண்டாகும் கருத்து வேறுபாட்டினை வளர விடாமல் உடனுக்குடன் அமைதியாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நேரம் சரியாக இல்லை என்பதை உணர்ந்து அடுத்தவர்கள் பிரச்னையில் தலையிடாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களுக்கு சொல்லும் அறிவுரைகள் உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். எதிர் வரும் ஒரு வருட காலத்தில் பேசாமல் அமைதியாக இருந்தாலே பல்வேறு சிக்கல்களும் தீர்ந்துவிடும்.

உடல்நிலை : உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை என்பதை இந்த குருப்பெயர்ச்சி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்து பார்த்தல் அவசியம். உணவுக்கட்டுப்பாடு ஒன்றுதான் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்தாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும் வீட்டு உணவினை மட்டும் உட்கொள்ளுங்கள். தலைவலி, மைக்ரேன், பித்தம் போன்ற பிரச்னைகளால் சற்று சிரமம் காண்பீர்கள்.

தொழில் : பொறமைக்காரர்களால் சிரமங்களை சந்திக்க உள்ளீர்கள். உங்களுடன் இருப்பவர்களில் ஒரு சிலர் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காது  வேண்டுமென்றே உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்க முயற்சிப்பார்கள். தொழில்முறையில் யாரிடமும் உங்கள் எதிர்ப்பினைக் காட்டாதீர்கள். நேரம் சரியாக இல்லை என்பதை உணர்ந்து அமைதியாக செல்லுங்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிக்கும் கீழ்நிலைப் பணியாளர்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிப்பார்கள். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதைக் கொண்டு சமாளித்து வருவது நல்லது.

பரிகாரம் : விநாயகப்பெருமானை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் : வீண்பேச்சால் அவப்பெயர் வரலாம்

பொது : நட்சத்திர அதிபதி ஆகிய குரு எட்டில் வந்து அமர்வதால் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும் முதலில் தடையையும், அதன் பிறகு ராசிநாதன் புதனின் புத்தி சாதுர்யத்தால் தடையைத் தாண்டி வெற்றியையும் கண்டு வருவீர்கள். தன்னம்பிக்கை என்ற பெயரில் அளவுக்கதிகமாக சுமையை ஏற்றிக்கொண்டு தள்ளாடுவீர்கள். குருவின் நீச பலமும், எட்டாம் இடத்து அமர்வும் அதிக சிரமத்தைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு எந்த ஒரு விஷயத்தையும் இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொண்டால் சமாளித்து வெற்றி பெய இயலும்.

நிதி : சிக்கன முயற்சிகள் ஓரளவிற்கு பலன் தந்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகள் உங்கள் கையிருப்பினைக் கரைக்கும். எந்த ரூபத்தில் இருந்து செலவு வருகிறது என்பதை கணிக்க இயலாமல் தடுமாறுவீர்கள். தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் செலவினை சமாளிக்கும் வகையில் வரவு நிலை இருக்கும். சேமிக்கும் முயற்சியில் வெற்றி காண மிகுந்த போராட்டத்தை சந்திப்பீர்கள். ஷேர்மார்க்கெட் போன்ற ரிஸ்க்கான துறையில் முதலீடு செய்ய ஏதுவான நேரம் இதுவல்ல. வங்கி சார்ந்த சேமிப்புகள் பயன் தரும்.
குடும்பம் : குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் கோபத்தினை அவர்கள் மீது காண்பித்தாலும் உங்கள் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் வழியில் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை.

கல்வி : வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.  அதே நேரத்தில் விடாமுயற்சி என்பது கட்டாயமாகிறது. ஆசிரியர்களிடம் நன்மதிப்பினைப் பெறுவதன் மூலம் கல்வி நிலையில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண இயலும். வணிகவியல் மற்றும் மொழிப்பாடங்களில் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் : தேவையில்லாத வீண் பேச்சுக்கள் உங்களுக்கு அவப்பெயரைத் தரக்கூடும். நீங்கள் நல்லது என்று நினைத்து பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. தம்பதியருக்கிடையே அவ்வப்போது வீண் வாக்குவாதம் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிரச்னையின் போது அமைதியாக இருப்பது மட்டுமே வெற்றியைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

உடல்நிலை : கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் நோய்தொற்றிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவுமுறையையும், கஷாயம் முதலானவற்றையும் உட்கொள்வது நல்லது.

தொழில் : குருவின் எட்டாம் இடத்து அமர்வினால் தொழில்முறையில் மந்தமான சூழலை உணர்வீர்கள். ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை குருவின் அதிசார அமர்வினால் திடீர் முன்னேற்றம் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சியில் ஈடுபட மேற்சொன்ன காலம் பயனுள்ளதாய் அமையும். நீதித்துறை, கல்வித்துறை, வணிகவியல் துறை பணியாளர்கள் சற்று சோதனைக்கு உள்ளாவார்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் அடுத்தவர்களை நம்பாது நேரடியாக களப்பணி ஆற்றினால் மட்டுமே வெற்றி காண இயலும்.

பரிகாரம் : வியாழன்தோறும் விரதமிருந்து வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து குரு பகவானை வழிபட்டு வர பிரச்னைகள் தீர்வடையும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar