Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறியூர் மாரியம்மன் கோவிலில் ... அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி தேர் திருவிழா: ரத சங்கமம் இன்றி நிறைவு
எழுத்தின் அளவு:
கல்பாத்தி தேர் திருவிழா:  ரத சங்கமம் இன்றி நிறைவு

பதிவு செய்த நாள்

15 நவ
2020
09:11

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு ஐப்பசி மாதம் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு தேர்த்திருவிழா கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் சடங்குகளாக மற்றும் நடத்த அனுமதித்தனர்.

இதையடுத்து கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் பின்பற்றி விழா கொண்டாட கோவில் நிர்வாகம் தீர்மானித்தனர். இதையடுத்து கடந்த 7ம் தேதி விழாவின் கொடியேற்றம் நடந்தது. ஒன்றாம் தேர் திருநாளான 13ம் தேதி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் தேவ கணங்கள் கோவில் வளாகத்தினுள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் தேர் திருநாளான 14ம் தேதி மந்தக்கரை மகா கணபதி கோவிலில் மூலவரின் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.


மூன்றாம் திருநாளான இன்று பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சாத்தபுரம் வசந்த மகா கணபதி ஆகிய கோவில்கள் மூவர்களின் சிறு பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பொதுவாக மூன்றாம் திருநாளன்று திரளான பக்தர்கள் முன்னிலையில் ரத் சங்கம் நடப்பது வழக்கம். இந்தாண்டு இச்சிறப்பு நடக்கவில்லை. முன்னதாக விழாவையொட்டி விழா கொண்டாடும் கோவில்களில் காஞ்சி காமகோடி பீட மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாரின் அறிவுரையின்படி வேதபாராயணம் நடந்தன. விழாவையொட்டி சாத்தபுரம் மஹாகணபதி கோவில் மூலவர் அஸ்வாரூடா வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் கடந்த தினம் நடந்தன. விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர் கூட்டம் தவிர்த்து முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் சடங்குகளாக மட்டும் விழா கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar