Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மணீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ... திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப திருவிழாவில் போலீஸ் கெடுபிடி: திருவண்ணாமலை நகரம் ‘வெறிச்’
எழுத்தின் அளவு:
தீப திருவிழாவில் போலீஸ் கெடுபிடி: திருவண்ணாமலை நகரம் ‘வெறிச்’

பதிவு செய்த நாள்

28 நவ
2020
07:11

திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, நகரில் யாரையும் அனுமதிக்காமல்,  போலீஸ் கெடுபிடி செய்வதால், திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவை காண ஆண்டுதோறும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவை காண, வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சில வெளியூர்  பக்தர்கள், கடந்த வாரமே, திருவண்ணாமலை வந்து, லாட்ஜ்களில் தங்கியுள்ளனர். 30ம் தேதி வரை வெளியூர் பக்தர்கள், முற்றிலும் வர தடை உள்ளதால், நகரின் உள்ளே வரும் பாதைகளில், மாவட்ட எல்லைகளிலேயே, 15 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.


திருவண்ணாமலை நகர் வழியாக, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகரினுள் அனுமதிக்கப்படாமல், புதிய பைபாஸ் சாலை வழியே அனுப்பப்படுகின்றன. நகரினுள் ஆங்காங்கே இரும்பு பேரிகாட்கள் வைத்து, உள்ளூர் மக்களே மற்ற பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாமல், தடுத்து நிறுத்தி, போலீசார் கெடுபிடி செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண நாட்களில் உள்ள மக்கள் நடமாட்டம் கூட இல்லாததால், திருவண்ணாமலை நகரமே, வெறிச்சோடி காணப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar