Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
11:12

 புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும் என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலர் தட்சிணாமூர்த்தி, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள புகார்:புதுச்சேரி, வெள்ளாள வீதியில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க தேர், 1989ம் ஆண்டு நன்கொடை ஒப்பந்த அடிப்படையில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு கையொப்பமிட்டு தரப்பட்டது. இரண்டு கோவில்களும், தங்கத்தேரை பூஜைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, நந்திகேஸ்வரர் கோவில் நிர்வாகம், மணக்குள விநாயகர் கோவிலுக்கு, தங்க தேரை நன்கொடையாக வழங்கியது.தற்போது மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த தங்கத்தேரில் பல்வேறு பகுதிகளை காணவில்லை.குறிப்பாக, அதன் அடிப்பகுதியை காணவில்லை. அதனோடு இருந்த சிற்பங்களும் மாயமாகியுள்ளன. இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோதும் பதில் இல்லை. இந்த கோவில் தேரின் அடிப்பாகங்கள், வேறு கோவிலுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். வரலாற்று பின்னணி கொண்ட தங்கத்தேரின் பாகங்களை மீட்டு, மீண்டும் கோவிலுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

பத்திரமாக உள்ளது: மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர் பரசுராமன் நேற்று கூறியதாவது:தங்க தேரின் அடி பாகம் மாயமானதாக, கவர்னரிடம், திருக்கோவில் கமிட்டி புகார் அளித்துள்ளது. தங்க தேரை, மர சகடையில் வீதியுலா கொண்டு செல்வதில் சிரமமாக இருந்தது. அதனால், மரத்தால் ஆன சகடைக்கு பதிலாக, ரப்பர் சக்கரம் பொருத்திய சகடை, பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2012ம் ஆண்டு, சுப்பையா சாலையில் உள்ள தனியார் கோவில் நிர்வாகம், சகடை தேவைப்படுவதாக அணுகியது. அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, அறநிலைய துறை வாயிலாக, மர சகடை அக்கோவிலுக்கு விற்பனை செய்யப்பட்டது.தங்க முலாம் பூசப்பட்ட தேர், மணக்குள விநாயகர் கோவிலில், தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. தங்க தேரின் பாகங்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar