பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று துவங்கிய பகல் பத்து உற்சவத்தில் பெருமாள் முரளிகண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ேஹமாம் புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் திருமொழித்திருநாள் (பகல்ப த்து) உற்சவம் நேற்று துவங்கிது. வரும் 24 ம் தே தி வரை உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை 5:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி உற்சவம், ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியதையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 3:00 மணிக்கு பிரபந்தசேவை கால துவக்கம், மாலை 4:00 மணிக்கு பிரபந்த சாற்று முறை , 4:30 மணிக்கு உற்சவர் பெருமாள் முரளிகண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை , இரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.