முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஆதங்கொத்தங்குடியில் வீரமாகாளி அம்மன் கோயிலில் கார்த்திகைமாத கடைசிநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.அம்மன், முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் நடந்தது. பின்பு அம்மன்,முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.