சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2020 02:12
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல்பத்து நேற்று துவங்கியது. டிச.,25ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.
நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள், சவுந்தரவல்லித் தாயார் சந்நதியில் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து உற்ஸவத்தின் 9ம் நாளன்று பெருமாள்மாலை 4:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதிவலம் வந்து, பின்னர்6:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் டிச.,25 அன்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. 5:00 மணி அளவில் சொர்க்கவாசல் வழியாக,பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று தொடங்கி ராப்பத்து உற்ஸவம் பத்து நாட்கள் நடக்கும்.மேலும் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்ஸவங்களின் போது பெருமாள்முன்பாக அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடுவர். சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானடிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.