பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
திருவொற்றியூர்: மார்கழி மாத பிறப்பையொட்டி, திருமண தடை நீங்க வேண்டி நடைபெற்ற, திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது.
இங்கு, ஆண்டுதோறும், மார்கழி மாதத்தின், 30 நாட்களிலும், அதிகாலை கோவில் வளாகத்தில், திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடக்கும்.இவ்வாண்டு, நேற்று அதிகாலை, மார்கழி பிறப்பையொட்டி, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், முக கவசம், சமூக இடைவெளியுடன், திருப்பாவை சேவித்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.மார்கழியின், 30 நாட்களிலும், அதிகாலை திருப்பாவை சேவித்தலில் பங்கேற்றால், திருமண தடை நீங்கும்; தொழில் வளர்ச்சி, பொருளாதார சூழல் உயரும் என்பது ஐதீகம். நிறைவாக, போகி பண்டிகையன்று, ஆண்டாள் - பெருமாள் திருக்கல்யாணம் நடக்கும். அப்போது, முகூர்த்த தேங்காய் பிரசாதமாக வழங்கப்படும். அந்த தேங்காயை பெற்று, வீட்டில் வைத்து பூஜை செய்து வழிப்பட்டால், விரைவில் திருமணம் கைக்கூடும் என, பட்டாச்சாரியர்கள் கூறினர்.