கூடலூர்: கூடலூரில், மார்கழி மாத, ராமர் பஜனை ஊர்வலம் துவங்கி உள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அரசு தேயிலைத் தோட்ட (பான்டீ) சரகங்கள், பல கிராமப்பகுதிகளில் மார்கழி ஒன்றாம் தேதி, ராமர் பஜனை ஊர்வலம் துவங்கி நடந்து வருகிறது. இப்பகுதி இளைஞர் குழுக்கள் கடும் குளிரிலும் கோயில்களிலிருந்து தினமும் அதிகாலையில் பசுவான ராமர் குறித்த பாடலை இசையுடன் பாடி, ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) கிராமங்களுக்குள் சென்று, வீட்டில் இருப்பவர்களிடம் பூஜை பெற்று, சூரிய உதயத்திற்கு முன் கோயிலுக்கு வந்தடைகின்றனர்.
மார்கழி மாதம் முடிந்து, தை ஒன்றாம் தேதி பொங்கல் திருநாளில் இதன் நிறைவு விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஊர்வலத்தில், கம்பம் விளக்குடன், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் பகவான் ராமரை சுமந்தபடி பக்தர்கள் வீடு வீடாக சென்று, பூஜை பெற்று கோவில் வந்தடைந்தார்கள். ஒரு மாத ஊர்வலத்தில் பங்கேற்கும் இளைஞர்கள், அவர்கள் குடும்பத்தார் அசைவ உணவை தொடுவதில்லை.